என்றும் பொது சேவையில் குட் லக் நண்பர்கள்   
::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள்! உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியாக நிகழக் கூடிய ஒன்றாகும். அனைவரும் இதை அறிந்திருந்தும் மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும்மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

Wednesday, November 27, 2013



பொதக்குடி மரண அறிவிப்பு (27-11-2013)

இன்று புதன்கிழமை 27/11/2013 மாலை, பொதக்குடி அப்துல்லாஹ் தெருவில் வசித்து வந்த

 NK முஹம்மத் ஷரீஃப் இறைவனிடம் சேர்ந்தார்கள்.

அன்னாரின் உறவுகள்:
சகோதரர்: தாங்கள் NK குத்புத்தீன்
மருமகப்பிள்ளை: KM ஹாஜா மைதீன்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(إنا لله و إنا إليه راجعون)

அன்னாரது மஃபிரத்திற்கும், மறுமை வெற்றிக்கும், அல்லாஹ்வின் பொருத்தம் பெறவும் துஆ செய்வதுடன்,

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையச்செய்வானாக என்று துஆ செய்வதுடன்,

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ஸப்றன் ஜமீல் (الصبر جميل) எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக, ஆமீன்!

No comments:

Post a Comment