நேற்று ஞாயிற்றுக்கிழமை 26/1/2014 முன்னிரவு, பொதக்குடி அப்துஸ்ஸத்தார் தெருவில் வசித்து வந்த A ஹாஜி முஹம்மத் இறைவனிடம் சேர்ந்தார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
(إنا لله و إنا إليه راجعون)
அன்னாரின் உறவுகள்:
தகப்பனார்: வெற்றிலைக்கொட்டகை அப்துல் காதர்
மகன்கள்: A அப்துல் முஹம்மத் & A நூர் முஹம்மத்
அன்னாரது மஃபிரத்திற்கும், மறுமை வெற்றிக்கும், அல்லாஹ்வின் பொருத்தம் பெறவும் துஆ செய்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழையச்செய்வானாக என்று துஆ செய்தவண்ணம்,
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் ஸப்றன் ஜமீல் (الصبر جميل) எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோமாக, ஆமீன்!
No comments:
Post a Comment